search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்"

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதிப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்திய காவல் துறையிரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதிப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்திய காவல் துறையிரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் 50க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு 1 கோடி இழப்பீடு தொகையாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க கோரி கண்டன கோசங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்க திருவெறும்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×